Followers

Sunday, December 29, 2019

ஞானக் களஞ்சியம் - இறை வணக்கம்

அழுத்தமெனும் உந்தாற்றல் ஒன்றைக் கொண்டே,
அணுமுதலாய் அண்டகோடி அனைத்தும் ஆக்கி
வழுத்துமோர் அறிவுமுதல் ஐந்தும்  ஆறும்
வகைவகையாம் உயிரினங்கள்  தோற்று வித்து,
முழுத்திறனுடன் காத்து, முடிக்கும் மேலாம்
பழுத்தநிலை வரும்வரையில் "நீ,  நான்" என்போம்
முழுமுதற் பொருளே நம்மறிவாய்  ஆற்றும்
பதமடைந்தோம்; ஒன்றானோம்; பரமானந்தம்.

வாழ்க வையகம் 
வாழ்க வளமுடன் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

No comments:

Post a Comment