Followers

Wednesday, January 1, 2020

வற்றாயிருப்பு

பல கோடான கோடி நுண்துகள்களின் தொடரியக்கம் தான் ஆன்மா. ஆன்மாவின் இயக்கத்தையும், எல்லை விரிவையும் கோசம் என்று குறிப்பிடுவர். ஆன்மா ஐந்து கோசங்களாக வகைப் படுத்தப்படுகின்றன. 

அன்னமய கோசம் 

உடல் தேவைகளை உணர்ந்து முடிக்கும் அளவில் அன்னமய  கோசமாக ஆன்மா செயல் படுகிறது. இந்நிலையில் மனம் உணர்ச்சி வசப்படும்.

மனோமய கோசம் 

புலனியக்க பதிவுகளின் போதும் நினைவலைகளை பிரதிபலிக்கும் போதும் ஆன்மா மனோமய கோசமாக செயல் படுகிறது. இந்நிலையிலும் மனம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும்.

பிராணமய கோசம் 

ஆன்மா தன் உணர்வாற்றலை நிலைபெறச் செய்யும் போது பிராணமய கோசமாக இருக்கிறது. இங்கு மனம் அறிவு நிலையில் இருக்கும்.

விஞ்ஞானமய கோசம் 

ஆன்மா பேரியக்க மண்டலத்தின் தோற்றம், இயக்கம், விளைவுகளை உணரும் போது விஞ்ஞானமய கோசமாகச் செயல்படுகிறது. இங்கு மனம் மெய்யுணர்வாக இருக்கும்.

ஆனந்தமய கோசம் 

ஆன்மா மெய் பொருளுணர்வு பெறும் போது ஆனந்தமய கோசமாக நிறைந்து முழுமை பெறுகிறது. இங்கும் மனத்தின் நிலை மெய்யுணர்வாக இருக்கும்.

வாழ்க வையகம் 
வாழ்க  வளமுடன் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

1 comment:

  1. I ever recommend the practice of YOGA. The real benefits, spiritual and physicals ever are so great with the constant and dailu practice. And your good article about kundalini yoga remembered me this variant of yoga. A good and powerful sustem that can i crease body energy and counciousness of prácticioner.

    Have a nice summer. LOVE and Joy for you.

    ReplyDelete