Followers

Wednesday, January 1, 2020

ஞானக் களஞ்சியம் - குரு வணக்கம்

அருள் துறைக்கு நேர்வழி 

முட்டைக்குள் அமைந்தகரு உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால் 
மூடிய ஓடுடைந்துவிடும்; குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்;
திட்டமிட்டு அறம்  ஆற்றித் தூய்மை  அறிவில் உடலில் பெற்று விட்டால் 
தீரும்வினை; புலன்மயக்கம் தாண்டிடலாம்; தீய  வினைப்பதிவு  எல்லாம் 
விட்டுவிடும்;   விளைவாக வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும்.
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது.
தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல்கண்டோர் 
தக்கவழி அருட்குருவின் தாள்பணிந்து தவம்பயின்று தனைஉணர்தல்.

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

2 comments: